Wednesday, September 6, 2017

Gauri Lankesh படுகொலை

இந்தியாவை பற்றி பேசும்போது, இது ஜனநாயக நாடு என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் என்பது தனிமனிதனுக்கு முழு உரிமையுள்ள நாடு, இங்கே கருத்து சுதந்திரம் உண்டு. விமர்சனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினரை, மந்திரியை, முதல்வரை, பிரதமரை என எவரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் முழு உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு.

ஆனால் இந்த 10 முறை பிறந்த புதிய இந்தியாவில் கேள்வி கேட்பவர்களை Anti-Indian என்கிறார்கள் சங்கிமங்கீஸ். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியக்கொடியை புறக்கணித்து காவி கோடி ஏற்றிய RSS இந்நாட்டை காக்க வந்த இந்தியர்கள் என தன்னை கூறிக்கொள்கிறது, ஆனால் அதே கும்பல் CRPF மற்றும் இராணுவத்தினரை விரட்டியடிக்கும் காட்சிகளை கண்டிருப்பீர்கள். RW விமர்சித்தவர்கள் கொலை செய்யப் படுகிறார்கள்.


ஒரு சில படங்களில் நீதிமன்ற காட்சிகள் கண்டிருப்பீர்கள், அது குற்றவாளிக்கு சாதகமாக அமையும். கொலையாளி/குற்றம் சுமத்தப்பட்டவர்களை அவர்களது வக்கீல்கள் "கணம் நீதிபதி அவர்களே குற்றம் நடந்த அன்று என் கட்சிக்காரர் இந்த ஊரிலேயே இல்லை, அன்று அவர் வெளியூர் சென்றுவிட்டார். அதற்கான ஆதாரமாக அவர் தங்கியிருந்த விடுதியின் ரசீதும், உணவகத்தின் ரசீதும் என்னிடம் உள்ளது" என அழகாக வாதாடி, அந்த குற்றவாளியை வெளியே கொண்டுவருவார்கள். தற்போது யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.
எனவே யாரை காப்பாற்ற நீங்கள் ஆட்சியை நடத்துகிறீர்கள், மக்களையா? அல்லது கொலையாளிகளையா?

மக்களுக்காக அமைக்கப்பட்ட சட்டமும், அரசும் மக்களுக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? அரசிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளத்தான் மக்கள் பாடுபட வேண்டியுள்ளது.
#GauriLankesh தொடர்ந்து இந்துத்துவா மற்றும் கேடி அரசை விமர்சித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு ஊடகவியலாளருக்கே கேள்வி கேட்க உரிமை இல்லை என்றால், கடைநிலை மக்களின் நிலை என்ன என யோசிக்கவே பதறுகிறது. "நான் எப்போது வேண்டுமானாலும் சுடப்படலாம்" என அடிக்கடி கூறியவர், தான் சாகப்போகிறேன் என தெரிந்தே வாழ்திருக்கிறார்.

தொடர்ந்து அரசை விமர்சிப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டே உள்ளனர். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, பாஜக தனுக்கு தானே மிகப்பெரிய புதைகுழியை தோண்டிக்கொண்டுள்ளது. விரைவில் வீழும்.

No comments:

Post a Comment