Thursday, July 21, 2016

விசாலினி ரமணி - Ola cab விவகாரம்

விசாலினி ரமணி - Ola cab விவகாரம் பற்றி விசாலினியின் முகநூல் பக்கத்தில் வாசித்தேன்.
இரவு பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் இறக்கிவிட்டவருக்கு தவறான நோக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு, போலவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது விதி என்பதால், அவர் மது அருந்தி தன்னை மீறுவதற்கான வாய்ப்பில்லை. இங்கு ஓட்டுநரை குறைக்கூற அவர் தகாத வார்த்தைகளையும் உபயோகிக்கவில்லை.
தற்போதுள்ள சூழ்நிலையில் "கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?" என ஒரு பெண்ணை மிரட்டுவது கண்டிக்கப்பட வேண்டியது. நாள் முழுதும் பல வாடிக்கையாளர்களை சந்தித்து இரவு ஓய்வுக்கான நேரம் நெருங்குகையில் சிலர் "அரசு ஊழியர்களின்" மனநிலையில் இருப்பது வாடிக்கை, மேலும் பயணத்திற்கான தொகையைத் தர மறுத்ததாலும் சற்று ஆவேசத்துடன் ஓட்டுநர் அவ்வாறு கூறியிருக்கலாம்.
"பொறுக்கி" என ஓட்டுனரை அப்பெண்மணி தன் சமூக வலைதளப் பதிவில் திட்டுவதை தவிர்த்திருக்கலாம்.
அதற்கு வினையாய், ஓட்டுனரை சிறைக்கு அனுப்பி, அவர் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கியது மிக மிக அதிகம், அனாவசியம்.

ஆம்! இனி பூமி வாழ்வதற்கு இல்லை.

பசி உயிரைக் கொல்லும், கதிரவன் தன்னால் இயன்ற வரை சுட்டெரிப்பான், இளைப்பாற நிழல் தரும் மரங்கள் வெட்டுண்டு வேர்களில் அமிலம் ஊற்றப்பட்டிருக்கும்.
பறப்பன, ஊர்வன, மிதப்பன என அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும் நடப்பனவற்றில் மனிதன் மட்டும் இருப்பான்.
தாகம் எடுக்கும், தண்ணீருக்காக நாவும், தொண்டையும் வெளி வந்து ஈரப்பதம் தேடி அலையும். அள்ளி அள்ளிப் பருக கானல் நீர் கடல் போல் ஊரெங்கும் பரவிக்கிடக்கும், தாகம் மட்டும் குறையாது.
பெருநிறுவன வளாகங்கள் அதோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான் இருக்கும். ஊர்ந்து பொய் குடிக்கத் தண்ணீர் கேட்டால் குடிக்க பெப்சி கொடுப்பான், விலையாக வாழும் நிலத்தை மட்டும் கேட்பான். இறப்பது மட்டுமே நிம்மதியைத் தரும்.

ஆம் இனி பூமி வாழ்வதற்கு இல்லை.