Thursday, January 5, 2017

கீச்சுலகம்

குழந்தை:
சிலேட்டின் மூலையில் அருவி வரைய தொடங்கிய குழந்தை, நான்கு கோணத்துக்குள் முடிக்கவியலாமல் இருக்கை வரை நீட்டித்தது. சரி தானே

வழிப்போக்கன்:
அழைபேசியில் ஒருவர் கோபத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது, ஆனால் ஆட்காட்டி விரல் நீட்டி யாரை எச்சரிக்கிறார்?

கடவுள்:
கடவுளை அன்றாடம் கடக்கும் ஒரு வழிப்போக்கனாக கடந்துவிடுங்கள், இல்லையேல் உறவாடி பூஜையறை வரை வந்துவிடுவான்.

காதல்:
இந்த இடம் நினைவிருக்கிறதா? என்றாள் *//அவ்விடத்தின் நினைவுகளை விட்டு நீங்கினால்தானே மறக்கவியலும்?//*
இல்லை என்றேன்.

வாழ்க்கை:

விமர்சனங்களுக்கு பயந்தவர்களின் பெயர்கள் எவ்வரலாற்றிலுமே இடம்பெறவில்லை.

பயணம்:
தன்னியல்பை தொலைப்பவர்க்கே பயணப்படுதல் வரமாகும், ஏனையோர்க்கு பிழைப்பிற்கான இடம்பெயர்தல்