Tuesday, September 19, 2017

ஆதியோகி - ஒரு வனத்திருடன் - 2

ஒரு பொத்தம்பொதுவாக வாசுதேவனின் ஆதியோகி சிலை திறப்பின் போது அவன் செய்ததை மேலோட்டமாக பேசியிருந்தேன்.

https://vivekravichandran.blogspot.in/2017/02/blog-post_21.html

தற்போது நான் கண்ட நேரிடை காட்சிகளும், அங்குள்ள பணியாளர்களிடம் நடத்திய விவாதமும் நடப்பவற்றை ஆழமாக உணரவைத்துள்ளது.

மூன்று நாள் விடுமுறை என்றவுடன் அம்மா ஆன்மீக பயணத்துக்கு குழி வெட்டி விதை தூவி தயாராக இருந்தார். மருதமலை, ஈஷா, கோவை குற்றாலம், பழனி இவைதான் தீர்மானிக்கப்பட்ட தளங்கள். இதில் கோவை குற்றாலம் நான் அடம் பிடித்து இணைத்த திடீர் தளம். பயணப்படுதல் என் ஆஸ்தான பொழுதுபோக்கு என்பதால் புறப்பட்டு விட்டேன். இயற்கையே பொறாமை கொள்ளும் வெள்ளியங்கிரி மலை மேற்சொன்ன நான்கில், மூன்று தளங்களை அடக்கிவைத்துள்ளது.

மருதமலை செல்லும் வழியிலேயே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது. விவசாயக் கல்லூரி, பாரதியார் பல்கலை, காருண்யா போன்று எங்கு திரும்பினும் கட்டிடங்கள். இதில் பல் கொறிக்க வைத்தது காருண்யா தான், எவ்வளவு இடத்தை வளைத்திருக்கிறார்கள், எவ்வளவு வன அழிப்பு. சரி அது வேறு கதை.

மருதமலை முடித்து ஈஷா சென்றோம். குதிரைலாட வடிவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பரவலாக ஒரு 700 ஏக்கர் நிலத்தில் உள்ளது ஈஷா. நிச்சயம் காட்டையே சுரண்டியுள்ளான் . இதற்க்கு ஈடாய் 7லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். 1000 மரங்கள் வளர்ந்திருந்தாலே ஒரு சிறிய வனம் உருவாகியிருக்கும். 7 லட்சம் எனில் ஒரு அமேசான் மலைக்காட்டையே உருவாகியிருக்கலாம். ஆனால் பறந்து விரிந்த அந்த பரப்பில் கிட்டத்தட்ட 150 மரங்கள் இருந்தன, அதில் சில தென்னை மரங்கள்.

இந்த மையத்தை அவன் ஆரம்பித்த நோக்கம் என்ன? யோகா கலையை பரப்பத்தானே? ஆனால் காணும் இடமெங்கும் பாம்பு சிலைகள். அதை வழிபடாமல் செல்ல இயலாதவாறு பாதையமைப்புகள். உள்ளே சென்றால் மக்களை ஈர்க்கும் வண்ணம் அனைத்து வேலைப்பாடுகளும் உள்ளது. பொதுவாக உள்ள ஒரு கடவுளை முன்னிறுத்தினால் பல முரண்பாடுகளை சந்திக்க நேருமென்று தன்னையே கடவுளாக்கிக்கொண்ட தியாகிதான் இந்த சத்குரு. அவன் பாதத்தை வழிபட்டால் மோட்சம் வந்து சேறுமாம், தியானலிங்கத்தில் ஆசி பெற்றவர்கள் மோட்சமடைவார்கள் என்றெல்லாம் மக்களை நம்ப வைக்கிறார்கள்.


தியான லிங்கத்தை கடந்து உள்ளே செல்லாமல் சென்ற என்னிடம் சண்டையிட்டார்கள் பணியாட்கள். அப்போது தான் தெரிந்தது அவன் கொள்கைகளை போதிக்க ஒரு அமைதியான இடம் தேவைப்படுகிறது. அலைபாய்ந்த மனதில் எவ்வளவு போதித்தாலும் சொல்லும் கருத்து ஆழ்மனதில் சென்று சேர்வதில்லை. எனவே இந்த தியானலிங்கம் மூலம் நம் மனதை ஈர்த்து, பின் அவனையும் ஈர்க்க வைக்கிறான்.

இவை அனைத்திற்கும் மேலாக ஆதியோகி சிலை. அதை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதன் நோக்கம் அறிந்தவர்கள் எனக்கு போதிக்கவும். காணும் இடமெங்கும் கடைகள், அனைத்திலும் மூலிகை, இயற்கையை மையமாக வைத்து வாய்க்குள் செல்லா பெயர்களை இட்டுள்ளான். காட்டை உருவாக்குகிறேன் என கூறுபவனே 6 ரூபாய்க்கு செடி விற்கிறான், காலக்கொடுமை.

அறிய கலைகள் பலவும் ஆன்மீகத்தால் சூழப்பட்டுள்ளது, ஆன்மிகம் மூடநம்பிக்கைகளால் சூழப்பட்டுள்ளது. நல்லது தீயது எது என்று பகுத்தறிந்தால் மட்டுமே தன் தேவைகள் எதுவென்று விளங்கும். இல்லையேல் இது போல நவீன சாமியார்கள் உங்களை ஏமாற்றி சுரண்டிக்கொண்டேதான் இருப்பார்கள். மொத்தத்தில் ஜக்கி ஒரு வீணாக்கப்பட்ட.....

No comments:

Post a Comment