Sunday, April 13, 2014

பெயரிடப்படாத....


வெகுநாட்களாகவே என் மனதினுட் புகுந்து என்னை குடைந்துகொண்டிருக்கிறது ஒரு எண்ணம், அது என்னவெனில் இப்படி போகும் சமூகத்தின் முடிவு தான் என்ன? என்பதே. இதில் அரசியல் புகுக்கவில்லை, அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அரசியல் தவிர்த்த சமூக கவலையா? அப்படியென்றால் எதை பற்றியது

வாழ்க்கை பாரபட்சமற்றது அனைவருக்கும் ஒரு வாழ்க்கயை கொடுத்திருக்கிறது, இதில் ஊனில்லாமல் பிறந்தது நாம் வாங்கி வந்த வரங்களுள் ஒன்று. ஆனால் அவ்வாறு நிறைந்து வந்த சிலர், குறையுள்ளவர்களை கேலி செய்வது தான் இங்கே அப்பட்டம், ஒருவேளை அவர்கள் குறையுடன் பிறந்திருந்தால் யாரை கேலி செய்திருப்பார்கள்? சுயசிந்தனை மனிதனுக்கு கிடைத்த மற்றொரு வரம், ஆனால் இச்சுயசிந்தனை வீட்டில் உள்ள வரை மட்டுமே, போதுவிற்க்கு வந்துவிட்டால் ஏளனம், அலட்சியம் ஆட்கொண்டுவிடுகிறது. கண்ட இடத்தில் எச்சில் துப்புதல், குப்பை போடுதல் நமக்கு சாதாரணம், நாம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டாம் குப்பை அள்ளுபவர்களை ஒரு முறையாவது சிந்திக்க வேண்டாம்? அதற்க்கும் சேர்த்து தான் நாம் வரி கட்டி கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டு செய்கிறோம்.

 
தொடரும்.........

அட்வைஸ் பன்னா கேட்கவாபோறீங்க?

"அப்பப்பா என்ன வெயில்" அனைவரின் காதுகளிலும் ஒலிக்கும் ஒரு தாரக மந்திரம். காரணம் கேட்டால் ஆண்டவனை குறை கூறுவது. உண்மையில் நீங்கள் செய்த வினையின் பயனே இவ்வளவு கொடூரமான வெயிலுக்கு காரணம்
நாம் என்ன ஆப்ரிக்காவிலா வசிக்கிறோம், இவ்வளவு வெயிலை தாங்குவதற்க்கு? அங்கே தான் ஆளை கொளுத்தும் அனலடிக்கும். ஆனால் அங்கு வசிக்கும் மனிதர்களுக்கு அதை தாங்கும் தோற்பதம் கொடுக்கப்பட்டுள்ளது.
Melanocortin 1 Receptor (MC1R) எனும் மரபணு 1.2 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சியின் காரணமாக கருங்குறங்கிலிருந்து மனிதனுக்கு வந்ததாக அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வகை மரபணு மிக அதிகமான அனலையும், கடும் குளிரையும் தாங்கும் விதத்தில் அமைந்துள்ளது.



தொடரும்.........

ஒரு புதிய முயற்சி


பிறந்துவிட்டோம் வளர்ந்துவிட்டோம் என்பதற்காக வாழ்க்கயை வாழ விரும்பாதவர்களின் பெயர்கள் தான் வாழ்க்கையின் பக்கங்களில் பதியப்படுகின்றன, பதியப்படும். இதை நினைக்கையில் ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் @kurumbuvivek என்னும் நபர் கீச்சிய "என்ன குழந்தை? எந்த ஸ்கூல்? எத்தன அரியர்? என்ன சம்பளம்? எப்போ கல்யாணம்? எத்தன குழந்தைங்க? உடம்புக்கு என்ன ? செத்துட்டாரா?-வாழ்க்கை" இவ்வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. நம்முள் பெரும்பாலானோர் வாழும் வாழ்க்கையையே இவ்வரிகள் குறிக்கின்றன. இதிலிருந்து சற்று வேறுபட்டு பயணித்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது என்பது கண்கூடு. 



 


தொடரும்..................................