Friday, May 8, 2015

என் அம்மாவிற்காக

முதல் நினைவு


 எங்கோ தூரத்தில் கேட்கிறது அக்குரல், எனக்கு முத்தமிட்டு தலைக்கோதி சீலைத்தொட்டிலில்(யாணை என்னும் பேச்சு வழக்கு உள்ளது) இட்டுச்சென்ற அந்த பாவியின் குரல். வெகு தொலைவில், பத்தடி தூரம் உள்ள பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டாள் . வெறுமை சூழ்ந்த சில கணம், எப்படி அழைப்பது அவளை? பேச்சும் வராது, வெறும் ங்ஙே மொழி மட்டும்தான். எவ்வளவு மாத்திரை கொண்டு ஒலிக்க வேண்டும் இச்சொல்லை, அவளுக்கு கேட்குமாறு இந்த "ங்ஙே"வை.

வார்த்தை வெளிவரும் முன் தாரைத்தாரையாய் கண்ணீர் மட்டும் வழிந்து சீலையின் ஒரு பக்கத்தை நனைத்துக் கொண்டிருக்கிறது. அதென்ன இதழோரம் ஒரு ஜோனை வழிகிறது, அது வாய்க்கு கண்ணீர் போலும்.

யுகமே கடந்துவிட்டது எங்கே போனாள்? ஆ! ஏதோ ஓர் அதிர்வு தெரிகிறது. "அச்சச்சோ ஏண்டா அழுவுற, அம்மா இங்கதாண்டா இருக்கேன்" அள்ளி எடுத்து இடுப்பில் அமர்த்தி சீலையில் முகம் துடைத்தாள். முதலில் கண்ணில் வழிந்ததை, பிறகு வாயில் வழிந்ததை "ஜொள்ளு பையா" என்று.

இதுதான் என்னுடைய முதல் நினைவு, கிட்டத்தட்ட 1 1/2 வயதிருக்கலாம். அவளிடம் பலமுறை இதைச் சொல்லிவிட்டேன், ஆனால் அம்மாவிற்கு நினைவில்லை.

 எனக்கென்னவோ இவ்வொரு நினைவுதான், ஆனால் வாழும் ஒவ்வோர் கணமும் வரமென கருதும் அவளுக்கு நினைவில் கொள்ள ஒன்றா, இரண்டா? மறந்திருப்பாள் போலும் என் அம்மா.

Tuesday, May 5, 2015

யார் பத்திரிக்கையாளன்?

#‎GobackIndianMedia‬ a viral tag created by people around world which is trending for a couple of days. http://t.co/UcREHJDeoo
இந்திய பத்திரிக்கையாளர்கள் நேபாளத்தில் நடந்த நிலநடுக்க காட்சிகளை உடனுக்குடன் ஒளிபரப்பினார்களே? பின் எதற்கு இது போன்ற டேக் உருவாக்கி கழுவி ஊத்தினார்கள்?
ஒரு குழந்தை அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அதை காப்பாற்றத்தான் முனைவர் அனைவரும் ஆனால் இந்த ஞானசூனீயங்கள் அதை புகைப்படம் பிடித்து "Live telecast from Nepal with Raw bloods and lives". கோபம் வருமா வராதா?

அதனால்தான் இந்த டேக் உருவாக்கி சாணியில் முங்கிய செருபால் அடித்துள்ளார் நேபால நண்பர் ஒருவர்.
வெரும் TRP Rating காக ஊடகம் நடத்தும் சில மாப்பியா குப்பல்களுக்கிடையே பின்வரும் பத்திரிக்கைகளும் பத்திரிக்கையாளர்களும் இந்தியாவில் இருந்தனர்.
Bengal Gazette by Hicky
Kesari by Lokmanya Bal Gangadhar Tilak
Amar Ujala
Dainik Jagran
The deccan chronicle by Tikkavarapu Chandrashekar Reddy
The Free Press Journal by Swaminathan Sadanand
O Heraldo by Prof. Messias Gomes and Luís de Menezes Bragança
The Pioneer by.George Allen, Rudyard Kipling
The Assam Tribune
The Hitavada (The People's Paper) by Gopal Krishna Gokhale
The Hindu as the Triplicane Sixconsisting of 4 law students and 2 teachers
The times of india - Sahu Jain family
Deepika by Syrian Catholic priest
Kerala Kaumudi by C. V. Kunhiraman with K. Sukumaran B.A.
Malayala Manorama by Kandathil Varghese Mappillai
Tamil Murasu (தமிழ் முரசு) a Singapore based Tamil language newspaper by Thamizhavel G. Sarangapani
The New Indian Express and DinaMani by P. Varadarajulu Naidu.
இவர்களும் பத்திரிக்கையாளர்கள் தான், சில கொள்கைகளுக்காக பத்திரிக்கை நடத்தியவர்கள், நிழலுலகை வெளிச்சமிட்டு காட்டியவர்கள். ஆனால் இன்றோ குரங்கு கையில் கிடைத்த பூமாலைப் போல் கையில் கேமெரா உள்ளவனெல்லாம் பத்திரிக்கையாளன். இதில் வாகனத்தின் பின்புறம் கொட்டை எழுத்தில் PRESS வேறு.
திருந்துங்கள்.
நீங்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்று சில பாமர ஜீவன்களும் வாழ்கின்றன, அவர்களுக்காவது நல்ல செய்தியை வழங்குங்கள்.
Once again Shame on you Indian media ‪#‎ShameonYouIndianMedia‬