Wednesday, May 25, 2016

வலிமிகும் அரவணைப்பு!!!

அனாதையாகப் பிறந்த எவ்வுயிரியாய் இருந்தாலும் நிச்சயம்மாக உங்களால் அதற்கு ஆதரவுத் தந்து நல்ல முறையில் வளர்க்க இயலும், அனால் ஒருபோதும் அவ்வுயிரித் தன் தாயிடம் கற்பது போல் தன் இனத்திற்கே உரித்தானக் குணாதிசயங்களை உங்களால் ஒருபோதும் கற்பிக்க இயலாது, இதுவும் படைப்பின் மறைபொருளே.

Wednesday, May 18, 2016

சிந்தனைக் கொலை !!!

இதுவரை எந்த உயர் மதிப்பெண்ணும் நாட்டையோ நாட்டு மக்களையோ வழிநடத்தியது இல்லை. எந்த அதிக மதிப்பெண் எடுத்தவரும் இலவசமாக கல்வியையோ, மருத்துவத்தையோ வழங்கியது இல்லை. புத்தகத்தை விழுங்கி வாந்தி எடுப்பதற்கு பெயர் தான் கல்வி, இக்காலத்து மாணவர்கள் xerox மெசின்கள். இன்று நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள், தான் மருத்துவராகி ஏழை மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க கனவு காணும் நாள் மட்டுமே.

மதிப்பெண்கள் நல்ல மனிதரை உருவாக்காது, போராடி வாழ்பவனுக்கே வாழ்க்கை தன் தேடல்களுக்கான விடைகளை வைத்துள்ளது.

நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டாமென்று சொல்லவில்லை, அவர்கள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான முதுகெலும்பு என்னும் எண்ணத்தை மாற்றவேண்டும் என்கிறேன்.