Saturday, August 26, 2017

சாமியார்கள் சல்லிப்பயல்கள்

மனித நாகரிகம் பல பரிமாணங்களை தாண்டி தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளது. உடல்மறைத்து உடையணிவதில்லை நாகரிகம், நல்லது தீயது எது என பகுத்தறிதலே. இவ்வாறு பகுத்தறிவதற்கு படிப்பு அவசியமில்லை நமக்கு, கொடுக்கப்பட்ட பொதுவான ஆறாம் அறிவே போதும்.

நம் பரம்பரையில் உள்ள முன்னோர்களை நாம் வணங்குவது அனைவருக்கும் தெரிந்ததே, சற்று வயதானவர்களுக்கு நம் முன்னோர்களை வணங்குகிறோம் என தெரியும். குழந்தைகளுக்கோ யார் எவரென தெரியாமல், பெரியவர்கள் வணங்குகிறார்கள் என அவர்களை பின்பற்றுவார்கள். சில குழந்தைகள் ஆர்வமிகுதியால் யாரை வணங்குகிறோம் எனக்கேட்டால் "பேசாம சாமி கும்பிடு" என கட்டுப்படுத்திவிடுகிறார்கள். குழந்தையும் சாமி என எண்ணி கும்பிடுகிறது. இவ்வாறே இன்று நாம் வணங்கும் கடவுள்கள் உருவாகியுள்ளது.

இன்று பல கோடி லாபமீட்டும் தொழிலாக உருவெடுத்துள்ள இந்த பக்தி தொழிலில், நமக்கும் நாம் வேண்டுபவர்களுக்கும் இடையில் வந்தவர்கள் தான் இந்த சாமியார்கள். சிலர் உண்மையில் ஆசைகளை துறந்து சன்யாசியாகவோ/சாமியாராகவோ இருக்கிறார்கள், ஆனால் மற்றும் சிலரோ நித்தியானந்தா போலவோ பிரேமானந்தா போலவோ மகத்தான சல்லிப்பயலாக உள்ளனர். இவர்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணமோ, பொருளோ பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்கள் என்றால் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறார்கள்.


#GurmeetRamRahimSingh இந்த பட்டியலில் இன்னுமொரு மகா மட்டமான சல்லிப்பயல், ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தற்போது 15வருடங்கள் கழித்து, அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது(குறிப்பு 15 வருடங்கள் கழித்து). தன்னை கற்பழித்துவிட்டதாக ஒரு பெண், மொட்டை கடிதத்தை அப்போதைய பிரதமரான வாஜ்பாய்க்கு அனுப்பினார். அந்த கடித்தை தான் நடத்தி வந்த "பூரா சச்" என்ற பத்திரிக்கையில் #RamChanderChhatrapati வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களில் அந்த சாமியாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் ராம் சந்தர்.

15 வருடங்களாக விசாரணை மட்டுமே நடத்தி காலதாமதம் செய்துவந்துள்ளது. பாஜகவால் மட்டும் தான் இப்படி ஒரு நிலையை தந்துவிட முடியும். நாட்டையும் நாட்டு மக்களையும் பின்நோக்கி செலுத்துகிறது பாஜக. தற்போது குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் வன்முறை வெடித்து இதுவரை 30 உயிரை பறித்துள்ளது.மேற்கு வங்கத்தில் வருமான வரி சோதனைக்கு அவ்வளவு ராணுவத்தை அனுப்பதெரிந்த மத்திய அரசுக்கு இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஒரு போலிஸையோ ராணுவத்தையோ அனுப்ப முடியவில்லை?
காவிகளும் பாஜகவும் ஒன்னுன்னு தெரியாதவனே மண்ணு தான். மோடிக்கு வாக்களித்த நீங்கள் ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் மூழ்கும் நேரமிது.

No comments:

Post a Comment