Wednesday, October 24, 2018

How to Crop Video from movie via VLC

1. Open the movie with VLC.
2. Navigate to View and check Advanced Controls.
3. You will see a new layout at the bottom with the Red stop alike button.
4. Press the button wherever you want to make the crop from and press again if you are finished.
5. By default the cropped video is saved on  C:\Users\Your_PC\Videos
6. Don't try to fast forward, you won't get desired results.

Wednesday, January 10, 2018

ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்"

வளர்த்த தந்தையாயினும் நீர்த்த ஒரு வாரத்தின் பிந்தைய பயணங்களில் சோகங்களும், நினைவுகளின் படிமங்களும் நிறைந்தே கனக்கும். இடம்பெயர்தல் என்னும் மாய இருப்பில் புதிய மனிதர்களின் அறிமுகங்களும், அவர்கள் சுமந்த அகங்காரங்களின் அறிமுகங்களும் எதிர்கொள்ளல் என்றுமே ஒரு அறை கூவல்.
இவை அனைத்தையும் எவ்வித வரைமுறையும் இன்றி தகர்த்தெறிகிறான் ஹென்றி. பொதுவில் ஹென்றி ஓர் உலக பிரஜை, சராசரி மனிதர்களின் கட்டுப்பாடுகளும், அடுத்தவர் மீது கொண்ட போலி அபிப்பிராயங்களும் அவனை ஒன்றும் செய்வதில்லை.
பைத்தியக்காரியை நம்முள் ஒருத்தியாக கொண்டாடும் ஹென்றியை, நாம் கொண்டாட வேண்டும்.
ஜெயகாந்தனின் மனிதர்கள் முகமூடிகள் அணிவதில்லை, வாழ்வை அதன் போக்கில் அணுகுகிறார்கள். அன்றாட வாழ்விற்கான ஓட்டங்கள் அவர்களிடையே மிகக்குறைவு. குமாரபுரத்தில் வாழ்ந்துவிட்டு வரலாம்.

ஜெயகாந்தனின் சிறந்த புத்தகம் என்று மற்ற எழுத்தாளர்களும், தன் படைப்பில் சிறந்தது இது என ஜெயகாந்தன் கூறுவதும் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்"

Tuesday, September 19, 2017

ஆதியோகி - ஒரு வனத்திருடன் - 2

ஒரு பொத்தம்பொதுவாக வாசுதேவனின் ஆதியோகி சிலை திறப்பின் போது அவன் செய்ததை மேலோட்டமாக பேசியிருந்தேன்.

https://vivekravichandran.blogspot.in/2017/02/blog-post_21.html

தற்போது நான் கண்ட நேரிடை காட்சிகளும், அங்குள்ள பணியாளர்களிடம் நடத்திய விவாதமும் நடப்பவற்றை ஆழமாக உணரவைத்துள்ளது.

மூன்று நாள் விடுமுறை என்றவுடன் அம்மா ஆன்மீக பயணத்துக்கு குழி வெட்டி விதை தூவி தயாராக இருந்தார். மருதமலை, ஈஷா, கோவை குற்றாலம், பழனி இவைதான் தீர்மானிக்கப்பட்ட தளங்கள். இதில் கோவை குற்றாலம் நான் அடம் பிடித்து இணைத்த திடீர் தளம். பயணப்படுதல் என் ஆஸ்தான பொழுதுபோக்கு என்பதால் புறப்பட்டு விட்டேன். இயற்கையே பொறாமை கொள்ளும் வெள்ளியங்கிரி மலை மேற்சொன்ன நான்கில், மூன்று தளங்களை அடக்கிவைத்துள்ளது.

மருதமலை செல்லும் வழியிலேயே கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது. விவசாயக் கல்லூரி, பாரதியார் பல்கலை, காருண்யா போன்று எங்கு திரும்பினும் கட்டிடங்கள். இதில் பல் கொறிக்க வைத்தது காருண்யா தான், எவ்வளவு இடத்தை வளைத்திருக்கிறார்கள், எவ்வளவு வன அழிப்பு. சரி அது வேறு கதை.

மருதமலை முடித்து ஈஷா சென்றோம். குதிரைலாட வடிவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பரவலாக ஒரு 700 ஏக்கர் நிலத்தில் உள்ளது ஈஷா. நிச்சயம் காட்டையே சுரண்டியுள்ளான் . இதற்க்கு ஈடாய் 7லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். 1000 மரங்கள் வளர்ந்திருந்தாலே ஒரு சிறிய வனம் உருவாகியிருக்கும். 7 லட்சம் எனில் ஒரு அமேசான் மலைக்காட்டையே உருவாகியிருக்கலாம். ஆனால் பறந்து விரிந்த அந்த பரப்பில் கிட்டத்தட்ட 150 மரங்கள் இருந்தன, அதில் சில தென்னை மரங்கள்.

இந்த மையத்தை அவன் ஆரம்பித்த நோக்கம் என்ன? யோகா கலையை பரப்பத்தானே? ஆனால் காணும் இடமெங்கும் பாம்பு சிலைகள். அதை வழிபடாமல் செல்ல இயலாதவாறு பாதையமைப்புகள். உள்ளே சென்றால் மக்களை ஈர்க்கும் வண்ணம் அனைத்து வேலைப்பாடுகளும் உள்ளது. பொதுவாக உள்ள ஒரு கடவுளை முன்னிறுத்தினால் பல முரண்பாடுகளை சந்திக்க நேருமென்று தன்னையே கடவுளாக்கிக்கொண்ட தியாகிதான் இந்த சத்குரு. அவன் பாதத்தை வழிபட்டால் மோட்சம் வந்து சேறுமாம், தியானலிங்கத்தில் ஆசி பெற்றவர்கள் மோட்சமடைவார்கள் என்றெல்லாம் மக்களை நம்ப வைக்கிறார்கள்.


தியான லிங்கத்தை கடந்து உள்ளே செல்லாமல் சென்ற என்னிடம் சண்டையிட்டார்கள் பணியாட்கள். அப்போது தான் தெரிந்தது அவன் கொள்கைகளை போதிக்க ஒரு அமைதியான இடம் தேவைப்படுகிறது. அலைபாய்ந்த மனதில் எவ்வளவு போதித்தாலும் சொல்லும் கருத்து ஆழ்மனதில் சென்று சேர்வதில்லை. எனவே இந்த தியானலிங்கம் மூலம் நம் மனதை ஈர்த்து, பின் அவனையும் ஈர்க்க வைக்கிறான்.

இவை அனைத்திற்கும் மேலாக ஆதியோகி சிலை. அதை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதன் நோக்கம் அறிந்தவர்கள் எனக்கு போதிக்கவும். காணும் இடமெங்கும் கடைகள், அனைத்திலும் மூலிகை, இயற்கையை மையமாக வைத்து வாய்க்குள் செல்லா பெயர்களை இட்டுள்ளான். காட்டை உருவாக்குகிறேன் என கூறுபவனே 6 ரூபாய்க்கு செடி விற்கிறான், காலக்கொடுமை.

அறிய கலைகள் பலவும் ஆன்மீகத்தால் சூழப்பட்டுள்ளது, ஆன்மிகம் மூடநம்பிக்கைகளால் சூழப்பட்டுள்ளது. நல்லது தீயது எது என்று பகுத்தறிந்தால் மட்டுமே தன் தேவைகள் எதுவென்று விளங்கும். இல்லையேல் இது போல நவீன சாமியார்கள் உங்களை ஏமாற்றி சுரண்டிக்கொண்டேதான் இருப்பார்கள். மொத்தத்தில் ஜக்கி ஒரு வீணாக்கப்பட்ட.....

Wednesday, September 6, 2017

Gauri Lankesh படுகொலை

இந்தியாவை பற்றி பேசும்போது, இது ஜனநாயக நாடு என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகம் என்பது தனிமனிதனுக்கு முழு உரிமையுள்ள நாடு, இங்கே கருத்து சுதந்திரம் உண்டு. விமர்சனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினரை, மந்திரியை, முதல்வரை, பிரதமரை என எவரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் முழு உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு.

ஆனால் இந்த 10 முறை பிறந்த புதிய இந்தியாவில் கேள்வி கேட்பவர்களை Anti-Indian என்கிறார்கள் சங்கிமங்கீஸ். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியக்கொடியை புறக்கணித்து காவி கோடி ஏற்றிய RSS இந்நாட்டை காக்க வந்த இந்தியர்கள் என தன்னை கூறிக்கொள்கிறது, ஆனால் அதே கும்பல் CRPF மற்றும் இராணுவத்தினரை விரட்டியடிக்கும் காட்சிகளை கண்டிருப்பீர்கள். RW விமர்சித்தவர்கள் கொலை செய்யப் படுகிறார்கள்.


ஒரு சில படங்களில் நீதிமன்ற காட்சிகள் கண்டிருப்பீர்கள், அது குற்றவாளிக்கு சாதகமாக அமையும். கொலையாளி/குற்றம் சுமத்தப்பட்டவர்களை அவர்களது வக்கீல்கள் "கணம் நீதிபதி அவர்களே குற்றம் நடந்த அன்று என் கட்சிக்காரர் இந்த ஊரிலேயே இல்லை, அன்று அவர் வெளியூர் சென்றுவிட்டார். அதற்கான ஆதாரமாக அவர் தங்கியிருந்த விடுதியின் ரசீதும், உணவகத்தின் ரசீதும் என்னிடம் உள்ளது" என அழகாக வாதாடி, அந்த குற்றவாளியை வெளியே கொண்டுவருவார்கள். தற்போது யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.
எனவே யாரை காப்பாற்ற நீங்கள் ஆட்சியை நடத்துகிறீர்கள், மக்களையா? அல்லது கொலையாளிகளையா?

மக்களுக்காக அமைக்கப்பட்ட சட்டமும், அரசும் மக்களுக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும்? அரசிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளத்தான் மக்கள் பாடுபட வேண்டியுள்ளது.
#GauriLankesh தொடர்ந்து இந்துத்துவா மற்றும் கேடி அரசை விமர்சித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு ஊடகவியலாளருக்கே கேள்வி கேட்க உரிமை இல்லை என்றால், கடைநிலை மக்களின் நிலை என்ன என யோசிக்கவே பதறுகிறது. "நான் எப்போது வேண்டுமானாலும் சுடப்படலாம்" என அடிக்கடி கூறியவர், தான் சாகப்போகிறேன் என தெரிந்தே வாழ்திருக்கிறார்.

தொடர்ந்து அரசை விமர்சிப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டே உள்ளனர். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, பாஜக தனுக்கு தானே மிகப்பெரிய புதைகுழியை தோண்டிக்கொண்டுள்ளது. விரைவில் வீழும்.

Tuesday, August 29, 2017

Spring, Summer, Fall, Winter... and Spring - உலகசினிமா ஒரு பார்வை


Bom yeoreum gaeul gyeoul geurigo bom(வசந்தம், கோடை, இலையுதிர், குளிர் மற்றும் வசந்தம்)

தென் கொரியாவின் தவிர்க்க இயலா இயக்குனராக உருவெடுத்திருக்கும் "கிம் டுக் கிம்" இயக்கியிருக்கிறார். ஒரு வசந்த காலத்தின் மாலையில் கையில் காப்பிக்கோப்பையுடன் காணவேண்டிய படம். முழு வாழ்க்கையை ஒரு சேர பார்வையிடுதல் போல் உள்ள காட்சியமைப்புகள் உயிரோட்டமுள்ளவை. படத்தின் காட்சிகள் அரங்கேறிய ஜூசஞ்சி ஏரி உங்கள் வறண்ட மனதில் பச்சையை நிரப்புகிறது.


இவ்விடத்தில் நாம் வாசித்தால் எப்படி இருக்கும் என அற்பமாய் நம் மனதுக்குள் தோன்றுமளவு அந்த இடத்தை இயற்க்கை தரிசித்துள்ளது. உண்மையில் அங்குள்ள பல நூறு வருடங்கள் கடந்த மரங்களின் தன்மையை பாதுகாக்க செயற்கையாய் அமைக்கப்பட்டுள்ளது அந்த ஏரி. படத்தில் காண்பிக்கப்படும் மரத்தாலான வீடு படத்திற்காக அமைக்கப்பட்டது.

5 பருவங்களாய் படத்தை பிரித்து, ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் பௌத்த கதைகளை வார்த்தைகளை விழுங்கி மௌனத்தால் சொல்கிறார் இயக்குனர். "காமம் மனிதனின் ஆசையை விழித்துக்கொள்ள வைக்கிறது, அதுவே கொலை செய்ய தூண்டுகிறது" என்பதை படத்தின் மைய கருத்தாக வைக்கிறார்.

மறு கரையில் உள்ள படகைக் கொண்டு எவ்வாறு அக்கரைக்கு துறவி வருகிறார், சீடனை கைது செய்துகொண்டு செல்லும்போது படகு நகராமல் நிக்க, துறவி கையசைத்ததும் நகர்தல் போன்றவற்றை தவ வலிமையில் எடுத்துக்கொள்வதா என தெரியவில்லை.

ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு உயிரினமும், அதனை உதவிக்கு கையாளும் விதமும் நுணுக்கம். இறந்த பிறகும் கூட துணியால் முகத்தை மூடிவரும் பெண்ணின் முகத்தை காட்டாதது, தான் செய்த பாவத்தை கழிப்பதற்காக மலை உச்சியில் தன்னை வருத்தி சீடன் வைத்த சிலை என தீர்மானமின்மையை நம்மிடம் கொடுத்துவிடுகிறார்.



உலகம் அதன் போக்கில் இயங்கினாலும் மனிதன் பாவம் செய்வதை நிறுத்த மாட்டான் என கதையை முடிக்கிறார்.

படத்தை மேலும் விலக்கினால் எதையுமே தவிர்க்க இயலாது. படத்தில் புல்பூண்டும் கதை சொல்கிறது, படமும் கதை சொல்கிறது.





#BomYeoreumGaeulGyeoulGeurigoBom #SpringSummerFallWinterandSpring #KimKi
duk


Saturday, August 26, 2017

சாமியார்கள் சல்லிப்பயல்கள்

மனித நாகரிகம் பல பரிமாணங்களை தாண்டி தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளது. உடல்மறைத்து உடையணிவதில்லை நாகரிகம், நல்லது தீயது எது என பகுத்தறிதலே. இவ்வாறு பகுத்தறிவதற்கு படிப்பு அவசியமில்லை நமக்கு, கொடுக்கப்பட்ட பொதுவான ஆறாம் அறிவே போதும்.

நம் பரம்பரையில் உள்ள முன்னோர்களை நாம் வணங்குவது அனைவருக்கும் தெரிந்ததே, சற்று வயதானவர்களுக்கு நம் முன்னோர்களை வணங்குகிறோம் என தெரியும். குழந்தைகளுக்கோ யார் எவரென தெரியாமல், பெரியவர்கள் வணங்குகிறார்கள் என அவர்களை பின்பற்றுவார்கள். சில குழந்தைகள் ஆர்வமிகுதியால் யாரை வணங்குகிறோம் எனக்கேட்டால் "பேசாம சாமி கும்பிடு" என கட்டுப்படுத்திவிடுகிறார்கள். குழந்தையும் சாமி என எண்ணி கும்பிடுகிறது. இவ்வாறே இன்று நாம் வணங்கும் கடவுள்கள் உருவாகியுள்ளது.

இன்று பல கோடி லாபமீட்டும் தொழிலாக உருவெடுத்துள்ள இந்த பக்தி தொழிலில், நமக்கும் நாம் வேண்டுபவர்களுக்கும் இடையில் வந்தவர்கள் தான் இந்த சாமியார்கள். சிலர் உண்மையில் ஆசைகளை துறந்து சன்யாசியாகவோ/சாமியாராகவோ இருக்கிறார்கள், ஆனால் மற்றும் சிலரோ நித்தியானந்தா போலவோ பிரேமானந்தா போலவோ மகத்தான சல்லிப்பயலாக உள்ளனர். இவர்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணமோ, பொருளோ பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்கள் என்றால் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறார்கள்.


#GurmeetRamRahimSingh இந்த பட்டியலில் இன்னுமொரு மகா மட்டமான சல்லிப்பயல், ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தற்போது 15வருடங்கள் கழித்து, அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது(குறிப்பு 15 வருடங்கள் கழித்து). தன்னை கற்பழித்துவிட்டதாக ஒரு பெண், மொட்டை கடிதத்தை அப்போதைய பிரதமரான வாஜ்பாய்க்கு அனுப்பினார். அந்த கடித்தை தான் நடத்தி வந்த "பூரா சச்" என்ற பத்திரிக்கையில் #RamChanderChhatrapati வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களில் அந்த சாமியாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் ராம் சந்தர்.

15 வருடங்களாக விசாரணை மட்டுமே நடத்தி காலதாமதம் செய்துவந்துள்ளது. பாஜகவால் மட்டும் தான் இப்படி ஒரு நிலையை தந்துவிட முடியும். நாட்டையும் நாட்டு மக்களையும் பின்நோக்கி செலுத்துகிறது பாஜக. தற்போது குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் வன்முறை வெடித்து இதுவரை 30 உயிரை பறித்துள்ளது.மேற்கு வங்கத்தில் வருமான வரி சோதனைக்கு அவ்வளவு ராணுவத்தை அனுப்பதெரிந்த மத்திய அரசுக்கு இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஒரு போலிஸையோ ராணுவத்தையோ அனுப்ப முடியவில்லை?
காவிகளும் பாஜகவும் ஒன்னுன்னு தெரியாதவனே மண்ணு தான். மோடிக்கு வாக்களித்த நீங்கள் ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் மூழ்கும் நேரமிது.

Thursday, August 10, 2017

நாளை மற்றுமொரு நாளே


மனிதனை பற்றி கூறவேண்டுமென்றால் "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என கூறிய ஜி.நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே" ஒரு சராசரி மனிதனின் ஒரு நாளை அழகாய் சித்தரிக்கிறது.

பாலுணர்வுடன் வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்க இயலும் வெகுசில எழுத்தாளர்களில் நாகராஜனும் ஒருவர் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
 


நாகராஜனின் கதாப்பாத்திரங்கள் அவர்களாக இருக்கிறார்கள், மனிதனின் போலி முகங்களை கிழித்தெறிகிறார்கள், முகத்தில் தோன்றும் வேண்டாவெறுப்பான புன்னகையை போலி என்கிறார்கள், நேர்மையாக இவ்வுலகில் எந்த காரியத்தையும் செய்யவியலாது என உணர்ந்தவர்கள்.
 
அடித்தட்டு மக்களாக நகரின் ஒதுக்குப்புறத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வு சேமிப்பு இல்லாதது, அவர்களுக்கு புவிசார்ந்த கோட்பாடுகள் இல்லை, உலகத்தின் இயக்குவிசை பற்றிய சிந்தனைகள் இல்லை, நீங்கள் ஓய்வு நேரங்களில் பரிதாபப்பட்டு பிறரிடம் விவாதிப்பதற்கான எல்லா தகுதிகளையும் பெற்றுள்ளனர்.

மனைவியை தொழிலுக்கு அனுப்பும் கணவன், மந்திரத்தால் குணமடையாது இறந்த குழந்தை என பெருங்கொடூரமான சம்பவங்களை தன் நாளில் ஒரு சம்பவமாக கடக்கின்றனர். இங்கே வலுத்தது தான் வாழும். வலுத்ததாக வாழ இயலாது என தெரிந்து வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என வாழ்பவர்களின் ஒரு நாளத்திய  போராட்டமே "நாளை மற்றுமொரு நாளே"

இவரின் எழுத்தில் 80களின் மெட்ராஸ் மிளிர்கிறது. ஷெனாய் நகரின் எழில், அதன் மரமடர்ந்த சாலைகள், குதிரை வண்டி என அப்போதைய மெட்ராஸ் சென்னையாக தளிரத் தொடங்கிய நேரமது. தற்போது பூசப்பட்டுள்ள அரிதாரத்தை அழகாக அழித்துக்காட்டுகிறார்.

முன்னுரையில் ஜே.பி.சாணக்யாவின் புனைவையே ஒரு சிறுகதையாய் எழுதலாம் போலிருக்கிறது.
 
#NaalaiMatrumoruNaale #நாளைமற்றுமொருநாளே